நலன் குமாரசாமியின் இயக்கத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் சிங்கம்.
சிங்கம் 2 வுக்குப் பின்பு எந்தப் படத்தில் நடிப்பது என்ற குழப்பம் இன்று வரை சூர்யாவுக்கு தீரவில்லை.
கௌதம் படம் ஏறக்குறைய ட்ராப். லிங்குசாமி ரூம் போட்டு ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றதெல்லாம் எதிர்கால திட்டம்தான், நிகழ்காலத்தில் எதுவுமில்லையாம்.
இதனால் சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமியிடம் கதை கேட்டிருக்கிறார்.
அந்தப் படம் வெளிவந்த போது, நலன் மாதிரியானவர்களின் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சூர்யா கூறியது நினைவிருக்கலாம்.
இதுவரை சூர்யா, நலன் புராஜெக்ட் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் கதை கேட்டிருப்பது மட்டும் உறுதி. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக