மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN

படுக்க வச்சு மிதிச்சாங்க – நடிகை தந்த அதிர்ச்சி

‘சூர்யா விக்ரமுக்கு ஒரு பாலா சார் கிடைச்சாரு. கார்த்திக்கு ஒரு அமீர் கிடைச்சாரு. என்னோட பாலா ராகாவாதான்’ என்றார் ஷக்தி. (இப்போதைக்கு பி.வாசுவின் மகன் என்றால் சட்டென புரிந்து கொள்வீர்கள், ஆனால் இப்படம் வந்தபின் ஷக்தி என்றாலே புரிந்து கொள்கிற அளவுக்கு இவர் வளரக் கடவதாக…) ‘படம் பேசும்’ என்ற படத்தின் பிரஸ்மீட்டில்தான் இப்படியொரு அறிமுகம் கொடுத்தார் தன் இயக்குனருக்கு. சுமார் ஒன்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்தை ராகவா என்ற புதிய முகம் இயக்கியிருக்கிறார். (இவரது பேச்சில் அப்படியே மிஷ்கின் தெரிந்தது தனி மேட்டர்) ‘படம் பேசும்னு தலைப்பு வச்சுட்டு படத்தை பற்றி நானே பேசிட்டு இருக்கக் கூடாது. அதனால் படத்தில் வொர்க் பண்ணியவங்களை பற்றி பேசிடுறேன் என ரொம்பவே கான்ஃபிடன்ட்டாக பேசிய ராகவா, இந்த படத்தில் என் முயற்சி பத்து பர்சென்ட்தான். மற்றதெல்லாம் என்னோட கோ டைரக்டர் மற்றும் டீம் வொர்க்தான்’ என்றார் அந்த தன்னம்பிக்கை குறையாமல்! எல்லாரையும் து£க்கி சாப்பிட்டது பூர்ணாவின் ஸ்டேட்மென்ட்தான். இதுவரைக்கும் ஆறு படங்களில் நடிச்சுட்டேன். எதுவுமே ஓடல. ஆனால் இந்த படம் எனக்கு தமிழ்சினிமாவில் பெரிய இடத்தை கொடுக்கும். முதல் நாள் ஷுட்டிங்ல என்னை படுக்க வச்சு முகத்துல மிதிக்கிற மாதிரிதான் முதல் ஷாட் எடுத்தாங்க. ஸ்டேஜில் அந்த ஸ்டில்லை பெரிது படுத்தி வைத்திருந்தார்கள். என் முகத்தில் ஒரு கால் ஏறி மிதிக்குதே, அது யாருன்னு நான் சொல்ல மாட்டேன். படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க என்று சஸ்பென்ஸ் வைத்த பூர்ணா, இந்த படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கேன். ஆனால் அந்த வலியெல்லாம் மறையுற நேரமிது என்றார். ‘வலியில்லாம ஒளியில்ல’ என்கிறார் பூர்ணா. பார்க்கலாம் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக