அஜீத் ஈகோ பிடித்தவர் , பிரச்சனைக்காரர் என்று தான் நினைத்ததாக நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார். நடிகர் ரகுமான் தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் அவதாரம் எடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான சிங்கம் 2 படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இது குறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்கள் என்னை தேடி வருகின்றனர். மேலும் பில்லா படத்தில் நடிப்பதற்கு முதலில் தயங்கினேன். ஏனெனில் பில்லா கதாநாயகன் அஜீத் ஈகோ பிடித்தவர், பிரச்சனைக்காரர் என்று நான் முதலில் நினைத்தேன்.
அஜீத்துடன் பணியாற்றுவது மிகவும் கஷ்டம் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் உறுதி அளித்த பின்பே படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். மேலும் படப்பிடிப்பு தொடங்கியதும் அஜீத்தை பற்றி நான் கேள்விப்பட்டது தவறு என்பதை புரிந்து கொண்டேன் என்றும் அவர் ஒரு இனிமையான மனிதர் எனவும் புகழ்மாலை சூடியுள்ளார் ரகுமான்.
அஜீத்துடன் பணியாற்றுவது மிகவும் கஷ்டம் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் உறுதி அளித்த பின்பே படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். மேலும் படப்பிடிப்பு தொடங்கியதும் அஜீத்தை பற்றி நான் கேள்விப்பட்டது தவறு என்பதை புரிந்து கொண்டேன் என்றும் அவர் ஒரு இனிமையான மனிதர் எனவும் புகழ்மாலை சூடியுள்ளார் ரகுமான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக